Friday, 30 September 2011

செல்வராகவன் பேட்டி


"மயக்கம் என்ன' படத்தின் கதை இயல்பான வகையை சேர்ந்தது என்றும், இதற்கும் தனது வாழ்க்கைக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.
.
தனுஷ் நாயகனாக நடிக்க, செல்வராகவன் மயக்கம் என்ன படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அப்போது செல்வராகவன் இந்த படம் பற்றி கூறியதாவது: மயக்கம் என்ன படத்தின் கதை எளிமையானது, இயல்பானது, இந்த கதைக்கும் என் வாழக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் தனுஷ் புகைப்பட கலைஞராக வருகிறார். இந்த பாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருந்ததால் தான் அவரை நடிக்க வைத்துள்ளேன். ரிச்சா அருவ்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஹிட்டாகி விட்டன.

திரைத்தேடும் பாடலை தனுஷ் எழுதியுள்ளார். ஒரு மழை பாடலை நான் எழுதியுள்ளேன். எளிமையான வரிகள் கொண்ட பாடல் தேவைப்பட்டதால் நானும், தனுஷûம் பாடல்களை எழுதியுள்ளோம். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டைக்கு பிறகு தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவது நல்ல அனுபவமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





தேங்க்ஸ் டு நியூ பேப்பர்