Thursday, 6 September 2012

ஏன் ஒரு கோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?



நல்ல கேள்வி!!! உங்களிடம் மூன்று கோடி ரூபாய்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்;அதைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்?

நிச்சயமாக நாம் எதையெல்லாம் நீண்டநாட்களாக விரும்பினோமோ அதை அனுபவித்துவிடுவோம்;இன்றுதான் நமது நாட்டிலேயே விலை உயர்ந்த கார்கள்,விலைமதிப்பற்ற நகைகள்,ஆடம்பரமான வீடுகள் என எல்லாமே கிடைக்கின்றன.
ஒரு முறை எனது ஆஸ்தான ஜோதிடர் ஒருவரிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்டேன்:

அண்ணே,உங்களிடம் ஒரு கோடி ரூபாய் தந்து அதை ஒரே நாளில் செலவழிக்கணும்னு நான் சொன்னா நீங்க என்ன செய்வீங்க?

அவர் மனதுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.அந்த  சிரிப்பின் ஒரு பகுதி அவரது புன்னகையாக வெளிவந்தது.

சொல்லுங்க; என்று அவரை வற்புறுத்தினேன்.

டெல்லியில் ஒரு ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் நிறுவனம் இருக்குது;அங்கே ஒரு நாள் வாடகை அம்பது லட்சம் ரூபாய்! அதை நம்ம ஊருக்கு வரச் சொல்லுவேன்;மீதியை எப்படிச் செலவழிப்பேன்னு உனக்குத் தான் தெரியுமே?
என அவர் படபடவென சொல்லி முடித்ததும்,நாங்கள் இருவருமே சிரித்தோம்;அந்த சிரிப்பு சிரித்து முடிய சில நிமிடங்கள் ஆனது.

இன்று நமது நாடு இருக்கும் நிலையில் சாதாரணக் குடும்பங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதே பெரிய சாதனையாக மாறிவிட்டன;ஏனெனில்,தினம் தோறும் விலைவாசி ஏறுகிறது;ஆனால்,சம்பளம் மட்டும் வருடத்துக்கு ஒருமுறைதான் உயருகிறது.எப்படி காலம் தள்ளுவது?



தனிமனிதனின் நிலை உயர்த்தப்பட்டால்,அவனது உயர்வு அவன் பணிபுரியும் நிறுவனம் மற்றும் அமைப்பின் நிலையை உயர்த்திவிடும்.அந்த நிறுவனங்களின் நிலை உயர்ந்தால்,அதன் தொடர் விளைவாக ஒரு நாட்டின் நிலையும் உயர்ந்துவிடும்.எனவே,அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதனையும் முன்னேற்றுவதே நமது இறைசேவை ஆகும்.ஆனால்,இன்று இலவசமாக இப்படிப்பட்ட முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஆன்மீக அமைப்புகளைத் தேட வேண்டியிருக்கிறது.அதற்கு தகுந்தாற்போல நமது நாட்டையும் முதலாளித்துவ நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.இதனால்,பணம் இருப்பவர்களிடம் மேலும் மேலும் பெருமளவு பணம் குவிந்துகொண்டிருக்கிறது;பணம் இல்லாதவர்கள் தினசரி வாழ்க்கை வாழ்வதே சாதனையாகிக்கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில் இருப்பவன்,இல்லாதவன் இந்த இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் சக்தி ஓம்சிவசிவஓம் ஜபிப்பதாலும்,ஜபிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாலும் உருவாகிவருகிறது.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழுகோடியே ஐம்பது லட்சம் பேர்கள் ஆகும்.தமிழ்நாட்டுக்கு வெளியே சுமார் மூன்று கோடித்தமிழர்கள் இந்தியாவெங்கும் மற்றும் உலக நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களில் பத்தில் ஒருவருக்கு ஓம்சிவசிவஓம் எப்படி ஜபிப்பது? என்ற வழிமுறை சென்றடைய வேண்டும் என ஆன்மீகக்கடல் விரும்புகிறது.இந்த மகத்தான தெய்வீகம் சார்ந்த தேசசேவையில் நீங்களும் பங்கேற்கலாம்;எப்படித் தெரியுமா?


ஆயிரம் நோட்டீஸ் அச்சடித்து ஆன்மீகக்கடலுக்கு அனுப்பி வைக்கலாம்;ஆயிரம் நோட்டீஸிக்கு ரூ.450/-தான் ஆகிறது.அக்டோபர் 2012 வது மாதத்தில் இரண்டு சனிப்பிரதோஷங்கள் வர இருக்கிறது.இந்த நாட்களில் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்களை விநியோகிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்;(ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள் குறைந்தது  5000 அச்சடித்து எமக்கு அனுப்புவது நல்லது)


அல்லது


நீங்களே அச்சடித்து உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸை விநியோகிக்கலாம்;இதன் மூலமாக உங்களால் உங்களுடைய ஊரில் ஒருசிலராவது ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பார்கள்;அவர்கள் அவ்வாறு ஜபிப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்கப்போவதால்,அவர்களின் ஜபத்தின் பலன்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் உங்களை வந்து சேரும்.இதன் மூலமாக உங்களுடைய மன உளைச்சலும்,பிரச்னைகளும் தீர்ந்துவிடும் அல்லது தீர்ந்துவிடுமளவுக்கு நீங்கள் சக்தி வாய்ந்தவராக மாறிவிடுவீர்கள்.கடந்த காலங்களில்  பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு இதுதான் நிகழ்ந்திருக்கிறது.


அல்லது


எம்மோடு அக்டோபர் 2012 இல் வரும் சனிப்பிரதோஷங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகிக்க வரலாம்;எங்கே என்பதை அறிய செல் எண்,போட்டோவுடன் மெயில் அனுப்பவும்;


அல்லது


இணையம் வழியாக ஓம்சிவசிவஓம் வலைப்பூவையும்,நோட்டீஸையும் பரப்பலாம்; groups, Facebook, google+,  free image hosting webs மற்றும் உங்களுடைய blogspots,wordpresses,google webpages,freewebs மூலமாக பரப்பலாம்.இப்படி இந்த வருடம் முழுவதும் பரப்புவது அவசியம் மற்றும் அவசரம் ஆகும்.ஏனெனில்,இதன் மூலமாக வர இருக்கும் அழிவுகளை பெருமளவு குறைக்க முடியும்.


நீங்கள் ஒரு நாளுக்கு 30 நிமிடம் வீதம் சுமார் 100 நாட்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தீர்கள் எனில்,மேலே கூறிய அத்தனை விதமான வழிமுறைகளையும் நீங்களே நடைமுறைப்படுத்தத் துவங்குவீர்கள்.

ஒரு புள்ளிவிபரப்படி,சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை நெருங்கிவிட்டது;கோயம்புத்தூரின் மக்கள் தொகை பதினேழு லட்சம் ஆகும்.தவிர ,தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத்தொகுதிகள் இருக்கின்றன.இதுவரையிலும் சுமார் 25 நகரங்களில் இருக்கும் 30 சிவாலயங்களில் தான் ஓம்சிவசிவஓம் விநியோகம் ஆகியிருக்கிறது.இது போதவே போதாது;வாருங்கள்! கை கொடுங்கள்!! நமது ஆன்மீக சக்தியை அதிகரிப்போம்;நமது நாட்டின் பொருளாதாரத்தை ஆன்மீக வழியில் வலுப்படுத்துவோம்;இந்த உலகத்தின் ஒரே வல்லரசாக மாற்ற முயலுவோம்;


ஓம்சிவசிவஓம்

http://www.aanmigakkadal.com/2012/09/blog-post_5.html

Friday, 15 June 2012

விமர்சனம்

விமர்சனம் - மனம் கொத்தி பறவை


"மெரினா" படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் படம் மனம் கொத்தி பறவை. "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு பெரிய பிரேக் ‌ஏற்படுத்தி தந்த இயக்குநர் எஸ்.எழில் இயக்கத்தில் சற்று பெரிய இடைவெளிக்குப்பின் வெளிவந்திருக்கும் திரைப்படம் என ஏகப்பட்ட சிறப்புகளுடன் வெளிவந்திருக்கும் காதல் ப(பா)டம் தான் "மனம் கொத்தி பறவை" என்றால் மிகையல்ல!

கதைப்படி வேறு வேறு சமூகத்தை சேர்ந்த எதிர், எதிர் வீட்டைச் சேர்ந்தவர்கள் நாயகன் சிவகார்த்திகேயனும், புதுமுக நாயகி ஆத்மியாவும் சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்து வளர்ந்த நாயகி மீது நாயகருக்கு காதல் என்றால் அப்படி ஒரு காதல்! ஆனால், கல்விதரத்திலும், வாழ்க்கை தரத்திலும், சமூக அந்தஸ்த்திலும் மிகவும் உயர்ந்த நாயகியிடம் தன் காதலை சொல்ல நாயகருக்கு பயங்கர தயக்கம்! ஆனால், நாயகி நட்பாக தன்னிடம் பழகுவதை எல்லாம் தன் ஆண் நட்பு வட்டாரத்தில் தப்பாக இல்லை, இல்லை... காதலாக கலந்துகட்டி சொல்லும் நாயகர் தனது பொய்களாலேயே நாயகியின் திருமணம் நின்று போக காரணமாகிறார். அப்புறம்? அப்புறமென்ன...? நாயகிக்கும், நாயகர் மீது காதல் இருந்ததா? இல்லையா...? உற்றார், ஊரார் எதிர்ப்பையும் மீறி நாயகனும், நாயகியும் இணைந்தார்களா...? இல்லையா...? என்பது மனம் கொத்தி பறவை படத்தின் பக் பக் மீதிக்கதை!

கண்ணனாக, காதலனாக, கதாநாயகராக சிவகார்த்திகேயன் வாழ்ந்திருக்கிறார். தன் தந்தை இளவரசு சொல்லும் வேலைகளை தட்டிக்கழித்தும், எதிர்வீட்டு நாயகியின் குடும்பத்தார் சொல்லும் காரியங்களை "எள்" என்பதற்குள் எண்ணெய் ஆக்கி முடிப்பதுமாக கலக்கி இருக்கிறார் சிவகார்த்தி! நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருந்தும் சிவகார்த்தி ஏனோ தெரியவில்லை... ஹீரோவாக நம் மனதில் ஒட்ட மறுப்பது சற்றே மைனஸ்! மற்றபடி ஓ.கே.!!

ரேவதி பாத்திரத்தில் வரும் ஆத்மியா பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "ஆத்ம" திருப்தியா!

சிங்கம் புலி, பரோட்டா சூரி, வெண்ணிறை ஆடை மூர்த்தி, சாமஸ், ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் காமெடிக்கு கியாரண்டி கூறுகிறார்கள். பலே! பலே! இளவரசு, ரவிமரியா, கி‌ஷோர், ஆடுகளம் நரேன், வனிதா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

டி.இமானின் இசையில் "டங்... டங்..." மற்றும் "போ போ... போ..." உள்ளிட்ட பாடல்கள் படத்தின் பெரியபலம்! சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு ஆஹா ஓஹோ பதிவு!

"காதலுக்கு மரியாதை" க்ளைமாக்ஸை மீண்டும் ஒரு முறை க்ளைமாக்ஸ் ஆக்கியிருப்பதை மட்டும் இயக்குநர் எஸ்.எழில் தவிர்த்திருந்தார் என்றால் "மனம் கொத்தி பறவை" மேலும் பெருவாரியான ரசிகர்களின் மனங்களை கொத்திப் பறந்திருக்கும் எனலாம்!


http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=737&ta=I

Friday, 30 September 2011

மதிகெட்டான் சாலை - விமர்சனம்


Tamil Flim Mathikettan salai

"களவாணி", "முதல்இடம்", பாணியில் தஞ்சாவூர் பகுதியை கதைக்களமாக கொண்ட மற்றுமொரு படம்தான் "மதிகெட்டான் சாலை". ஆனால், இதில் காதல் மட்டும் இல்லை... காதலால் மதிகெட்டவனின் கதையும் புகுத்தப்பட்டிருப்பது புதுமை!!

வீட்டுக்கு அடங்காமல், வேலை வெட்டிஇல்லாமல், வீரமும், விளையாட்டுத்தனமாகவும் திரியும் நான்கு இளைஞர்களும், அவர்களுக்கு அடைக்கலம் தரும் ஒருகுடும்பமும் தான் "மதிகெட்டான் சாலை" படத்தின் கதைக்களம். நான்கு இளைஞர்களில் ஒருத்தனுக்கு, சின்ன வயதில் இருந்தே தங்களுக்கு அடைக்கலம் தரும் அந்த குடும்பத்தின் பெண் மீது காதல் வருகிறது. அந்த காதலால் தன் நண்பர்களையும், அந்த குடும்பத்தையும் பகைத்துக் கொண்டு பிரிந்து செல்லும் இளைஞன், சேரக்கூடாத இடத்தில் எல்லாம் சேர்ந்து சீரழிவது தான் "மதிகெட்டான் சாலை" மொத்த படமும்! அப்படி சீரழிந்த இளைஞன், படத்தின் நாயகன், இறுதியில் ஒருதலை காதலில் ஜெயித்தானா...? அல்லது காதலி முன் செத்து ஒழிந்தானா...? என்பது பரபரப்பான க்ளைமாக்ஸில் வித்தயாசமும், விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருப்பது புதுமை!

கதைநாயகனாக ஆதர்ஷ் எனும் புதுமுகம் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார். நடிப்பை விட ஆதர்ஷூக்கு பாட்டும், ஃபைட்டும் பக்காவாக வருகிறது. கதாநாயகி திவ்யா நாகேஷ் இன்னமும் குழந்தை நட்சத்திரமாகவே தெரிவது மைனஸ்!

ஸோலோ காமெடியில் சிங்கமுத்து இளம் மனைவியை இளைஞர்களிடமிருந்து காபந்து செய்யபடும்பாடு செம சிரிப்பு! வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், நரேன், சந்தீப், தமிழ், கிருஷ்ணகுமார், லாவண்யா, ஈரோடு கோபால், சேதுபாரதி, வில்லன் அறிவு, மதன் உள்ளிட்டவர்களும் பளிச் தேர்வு! எஸ்.தாஸின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் இசையும் படத்தின் பெரும் பலம்!

மொத்தத்தில் ஜி.பட்டுராஜனின் எழுத்து-இயக்கத்தில் "மதிகெட்டான் சாலை", ரசிகர்களின் "மதிமயக்கும் சோலை!"

நடிகர் : ஆதர்ஷ்
நடிகை : திவ்யா நாகேஷ்
இயக்குனர் :பட்டுராஜன்





செல்வராகவன் பேட்டி


"மயக்கம் என்ன' படத்தின் கதை இயல்பான வகையை சேர்ந்தது என்றும், இதற்கும் தனது வாழ்க்கைக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.
.
தனுஷ் நாயகனாக நடிக்க, செல்வராகவன் மயக்கம் என்ன படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அப்போது செல்வராகவன் இந்த படம் பற்றி கூறியதாவது: மயக்கம் என்ன படத்தின் கதை எளிமையானது, இயல்பானது, இந்த கதைக்கும் என் வாழக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் தனுஷ் புகைப்பட கலைஞராக வருகிறார். இந்த பாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருந்ததால் தான் அவரை நடிக்க வைத்துள்ளேன். ரிச்சா அருவ்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஹிட்டாகி விட்டன.

திரைத்தேடும் பாடலை தனுஷ் எழுதியுள்ளார். ஒரு மழை பாடலை நான் எழுதியுள்ளேன். எளிமையான வரிகள் கொண்ட பாடல் தேவைப்பட்டதால் நானும், தனுஷûம் பாடல்களை எழுதியுள்ளோம். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டைக்கு பிறகு தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவது நல்ல அனுபவமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





தேங்க்ஸ் டு நியூ பேப்பர் 

Saturday, 24 September 2011

எங்கேயும் எப்போதும் - விமர்சனம்

Tamil Flim Engeyum Epothum



பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் பட நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோஸ்வுடன் இணைந்து தன் உதவியாளர் எம்.சரவணன் இயக்கத்தில் முதன்முதலாக தயாரித்திருக்கும் தரமான ப(பா)டம் தான் "எங்கேயும்... எப்போதும்..."


கதைப்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் ஆம்னிபேருந்து புறப்படும் அதே நேரத்தில், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு அரசு சொகுசு பேருந்தும் புறப்படுகிறது. இரண்டு பேருந்துகளும் விழுப்புரம் அருகே எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாக, அதில் நிலைகுலைந்தும், உயிர் இழந்தும் போனவர்களது சொந்தகதை, சோக கதைகளுடன் சில, பல காதல் கதைகளையும், காமெடி காட்சிகளையும் இணைத்து கலக்கலாக கதை சொல்லி, கண்ணீரை வரவழைத்து விடுகிறார் இயக்குநர் சரவணன். சபாஷ் சரவணன்.


திருச்சியில் இருந்து அரசூர் நோக்கி சென்னை பேருந்தில் பிரயாணிக்கும் ஜெய்-அஞ்சலியின் காதலாகட்டும், சர்வானந்த்-அனன்யாவின் அறிமுகமும் அதைத்தொடர்ந்து அவர்களுக்குள் எழும் காதலுமாகட்டும், இன்னும் புதிதாய் திருமணமான ஒரு பிரியமான ஜோடியின் பிரியமுடியாத காதலாகட்டும், கண்டக்டரின் சதியால் பிரிந்து, பின் இணையும் பேருந்து இளம் காதலர் ஆகட்டும், அந்த சுட்டி குழந்தை ஆகட்டும், அதை அடக்கும் அழகு அம்மாவாகட்டும், அரசூர் ஊர் தலைவராகட்டும், அனன்யாவின் அழகு அக்காவாகட்டும், எல்லோருமே நச் என்ற பாத்திரத்தில், பளிச் என்று நடித்து ரசிகர்கள் மனதை டச் செய்து விடுகின்றனர். பலே, பலே!


ஜெய் முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். மற்றொருநாயகர் சர்வாவும் தானும் சளைத்தவர் இல்லை என நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார்.


நாலு வீடு தள்ளி மாடியில் இருந்து கை காட்டும் ஜெய்யை மடக்கி, காதலும் கண்டிப்பும் காட்டும் அஞ்சலி, ஜெய் உடனான காதலில் நடிக்கவே இல்லை, உண்மையை சொல்வதென்றால் ஜெய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார். எவ்வளவுதான் படித்திருந்தாலும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் புதிதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பயத்தை பிரமாதமாக தன் நடிப்பில் காட்டியிருக்கும் "நாடோடிகள்" அனன்யா, சர்வாவுடனான காதல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
ஒவ்‌வொரு காட்சியிலும் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு ஓவியம் என்றால், சத்யாவின் இசை, ஆரம்பகாட்சிகளில் ஏற்படுத்தும் விறுவிறுப்பு, கடைசி வரை பாடல் காட்சிகளிலும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படம் முழுக்க எக்கச்சக்க காதல் ஜோடிகளுடன், இனிமையாக ரசிகர்களையும் பிரயாணம் செய்ய வைத்து, க்ளைமாக்ஸில் அந்த ஜோடியை பிரித்து விட்டாரே... இந்த ஜோடியை சேர விடவில்லையே... என எமனையும், இயக்குநர் எம்.சரவணனையும் சபிக்க வைத்திருப்பது தான் "எங்கேயும் எப்போதும்" படத்தின் பெரிய பலம்!



சூப்பர் படம்.. சரவணனுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்.... ஜெய்,அஞ்சலி,அனன்யா, மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் பிரமாதம். விபத்துகளின் விளைவுகளை பற்றி மக்களுக்கு எடுத்து கூறியிருப்பது மற்றும் அதிவேகத்தின் ஆபத்துகளை மக்களின் மனதில் பசுமரத்தாணி போல பதிய வைத்துள்ளது.. இறந்த பின்பு உடல் உறுப்புகள் தியாகம் செய்யும் காட்சிகள் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துள்ள படம் "எங்கேயும் எப்போதும" ... நன்றி சரவணன்...





 நடிகர் : ஜெய்
      நடிகை : அஞ்சலி
      இயக்குனர் :சரவணன் 




Saturday, 17 September 2011

திரை விமர்சனம்

ஆயுதப்போராட்டம் 


Tamil Flim Ayuthaporatam


வளர்ந்து வரும் நடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என்று இன்னும் சில அவதாரங்கள் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "ஆயுதப்போராட்டம்". ஆனால் அவரது நடிப்பு அளவிற்கு கூட புதிய அவதாரங்களான எழுத்து, இயக்கம், தயாரிப்பு உள்ளிட்டவைக‌ள் தரமானதாக இல்லாததுதான் ஏமாற்றம்...!

ஒரு நாட்டில் உள்நாட்டு போரில் நீண்ட நெடுங்காலமாக ஈடுபட்டு வரும் போராளிகளை ஒழிக்க, மற்றொரு நாட்டின் ஆயுத சப்ளை நிறுவனம் ஆயுதம் வழங்குகிறது. இதனால் பாதிப்பிற்குள்ளாகும் போராளிகள், தங்கள் நாட்டிற்கு வரும் ஆயுத சப்ளை ஊழியர்கள் சிலரை காலி பண்ண களம் இறங்குகின்றனர். வென்றது போராளிகளா...? உண்மையை உணர்ந்து கொள்ளும் ஆயுதசப்ளை நிறுவன ஊழியர்களா...? என்பது க்ளைமாக்ஸ்! இந்த கதையுடன் காதல், ‌காமநெடி, காமெடி எல்லாவற்றையும் கலந்துகட்டி கலக்கலாக கதை சொல்ல முயன்று, படு லோக்கலாக படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெய் ஆகாஷ்! ரசிகர்கள் தான் பாவம்!!

போராளித்தலைவனாகவும், ஆயுதசப்ளை நிறுவன ஊழியர்களில் ஒருவராகவும் ஹீரோ ஜெய் ஆகாஷ், இதில் டபுள் ஆக்ட் வேறு கொடுத்து வெறுப்பேற்றியிருக்கிறார். ஆனால் அவரது எழுத்து, இயக்கம், இத்யாதி, இத்யாதிகளுக்கு நடிப்பு பெட்டர் என்பது ஆறுதல்! படத்திற்கு "ஆயுதப்போராட்டம்" எனப்பெயர் வைத்துவிட்ட காரணத்தால், பாடல்காட்சிகளில் (மட்டும்) எல்லாம் துப்பாக்கியும் கையுமாக ஜெய், போஸ் கொடுப்பது செம காமெடி!

கதாநாயகிகள் ப்ரீத்தி மீனாள், அனிதாரெட்டி இருவருக்கும் நடிப்பை விட அவிழ்ப்பு(துணி)க்கு வாய்ப்பு அதிகம்! அதை இருவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டு ஜெய்யின் அட்டகாசங்களில் இருந்து ரசிகர்களை காபந்து செய்வது ஆறுதல்! தீப்பெட்டி கணேஷ், சாய்கிரன், அதித் சீனிவாஸ், நீரஜ் புரோகித், சித்திரம் பாஷா உள்ளிட்டவர்கள் ஜெய்க்கு பக்கபலமாக இருந்து ரசிகர்களை மேலும் பாடாய்படுத்தி விடுகின்றனர்.

சாய்சதீஷின் ஒளிப்பதிவு, நந்தன் ராஜின் இசை எல்லாம் நன்றாக இருந்தும், கதையும், களமும், இயக்கமும் சரியில்லாதது வருத்தம்! ஓபனிங் ஃபைட் சீனும், பாடல் காட்சிகளும் பிரமாதம்! பிரமாண்டம்!! க்ளைமாக்ஸில் நடிகர்சங்க போராட்டம் வலிய திணிக்கப்பட்டிருப்பது நாடகம்!

மொத்தத்தில் இலங்கை போராளிகளை கவுரவப்படுத்துகிறேன் பேர்வழி... என களமிறங்கி, இலங்கை இராணுவத்தை காட்டிலும் கொச்சைபடுத்தி இருக்கிறார் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜெய் ஆகாஷ்!

"ஆயுதப்போராட்டம்", ஆகாஷின் "போர்" ஆட்டம்!

திரை விமர்சனம்

மிட்டாய் 


Tamil Flim


நட்பிற்காக காதலியை விட்டுக் கொடுக்கவும், காதலை தியாகம் செய்யவும் தயங்காத நண்பர்களின் கலக்கல் கதைதான் "மிட்டாய்". கலங்க வைக்கும் க்ளைமாக்ஸை உள்ளடக்கிய கதையும் கூட "மிட்டாய்" என்பது மிரட்டல்!

ஊதாரியாக, காதலி கிடைத்ததும் உயர்பவராக கதையின் நாயகர் சூர்யாவாக, நடிகர் சந்தோஷ் நன்றாகவே நடித்திருக்கிறார். ஒரு காதல் செய்வீர், திருரங்கா, உள்ளிட்ட இவரது முந்தைய படங்களில் நடித்திருந்ததை காட்டிலும் மிட்டாயில் மிளிர்ந்திருக்கிறார். உடம்பை சற்றே குறைத்தால் இன்னும் உயரத்தை எட்டலாம் இவர். கதையின் மற்றொரு நாயகராக சந்தோஷின் நண்பராக வரும் பிரபாவும் பிரமாதம். நட்பிற்காக காதலையே தியாகம் செய்ய துணியும் இவரது பாத்திரம் புதுமை!

கதையின் நாயகி பூஜாவாக, புதுமுகம் மாயா உன்னி, குடும்ப குத்து விளக்கு எனும் அளவிற்கு ரொம்பவும் ஹோம்லி! நடிக்கவும் செய்து நன்றாகவும் இருக்கும். அம்மணியை, தமிழ் சினிமாவில் ரொம்பவே எதிர்பார்க்கலாம்! படத்தில் அவரது பெயருக்கு முன் தரப்பட்டிருக்கும் "தேன் மிட்டாய்" எனும் அடைமொழி மாதிரியே இனிக்கிறார்.

மகாநதி சங்கர், சிங்கமுத்து, நெல்லை சிவா, சாம்ஸ், பூச்சி செந்தில், லொள்ளுசபா சாமிநாதன், மீரா கிருஷ்ணன், சேது பாரதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஆனால் யாரும் பெரிதாக மின்னாதது "மிட்டாய்" படத்தின் பலவீனம்!

சபேஷ் முரளியின் இசை, நாக கிருஷ்ணனின் ஒளிப்பதிவு இரண்டும் "மிட்டாய்" படத்தை கொட்டாவி விட வைக்காமல் பார்க்க வைப்பது பலம், பலவந்தம். மந்திரம், மாயாஜாலம் எல்லாம்!. இயக்குநர் அன்பு அருள்நிதி, பாரதிராஜாவின் சிஷ்யர் என்பதாலோ என்னவோ, "அடி ஆத்தாடி..." எனும் குருநாதரின் "கடலோர கவிதைகள்" படப்பாடலை ஹீரோயினுக்கு பதில் ஹீரோவை ஆடவிட்டு ரீ-மிக்ஸ் செய்து இருக்கிறார்.

இந்த இனிமையும், க்ளைமாக்ஸ் புதுமையையும் படத்தின் பிற காட்சிகளிலும், குறிப்பாக முன்பாதி காட்சிகளில் புகுத்தியிருந்தால் "மிட்டாய்", தேன்மிட்டாயாக இனித்திருக்கும். அப்படி இல்லாததால், "பாதி புளிப்பு மிட்டாய்", "மீதி தேன் மிட்டாய்" ஹீ... ஹீ...!

Thursday, 4 August 2011

புதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்


இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக  இணையத்தை தேடவில்லை  என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள்.

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும். 

இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளத்தில் 90களில் வந்த திரைப்படங்கள் கூட பார்க்க முடிகிறது. 

நீங்கள் இணையத்தில் பழைய திரைப்படங்களை தேடி தேடி அலுத்து போய் விட்டீர்களா ஆம் என்றால் உங்களுக்கான சிறந்த தளம் இது தான். இந்த தளத்தில் பழைய திரைப்படங்கள் கொட்டி கிடக்கிறது. பழைய பட விரும்பிகள் இந்த தளத்தை பயன் படுத்தி கொள்ளுங்கள்.

4) Tamil Peek
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.
5) Tamil tvs.com
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.

6)Good Lanka
இந்த தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாட்டுக்களை கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உங்களுக்கு தேவையான வீடியோ பாட்டுக்களை இந்த தளத்தில் கேட்டு மகிழலாம்.

7) Tube Kolly
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.

8)TamilVix
இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளமும் இலவசமாக திமில் திரைப்படங்களை காண சிறந்த தளமாகும். 

இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

10) Thiruttu VCD
இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.


  1. Cinema Theatre in Chennai

  2. Devicineplex

  3. www.devicinemas.in/
    Devi Cinemas & Devi Theatre and Cineplex Online and internet booking - Ticketing Infrastructure by TicketNew
    48, Anna Salai, சென்னை, Tamil Nadu
    044 28555660



  4. Inox


    www.inoxmovies.com/
    No 10/11 Chennai Citi Centre 3rd Floor, Chennai, Tamil Nadu
    044 42658888 




  5. Chennai Citi Centre

    Radha Krishnan Salai, சென்னை, Tamil Nadu
    044 32941083
    metromela.com (3)



  6. Ega Theatres


    www.egacinemas.com/
    810, Poonamalle High Road, Poonamalle High Road, Kilpauk, Chennai, Tamil Nadu
    044 26411666 





  7. Abirami Multiplex


    www.abirami.in/
    Copyrights 2010 © Abirami Mega Mall
    No. 152, Abirami Mall, Purasaiwalkam High Road, Purasawakkam, Chennai, Tamil Nadu
    044 25324477 




  8. Escape Cinemas


    www.escapecinemas.com/
    Express Avenue Mall, Whites Road, Express Estate, Thousand Lights, Chennai, Tamil Nadu




  9. Casino Theatre


    maps.google.co.in
    Meeran Sahib St, Chintadripet, சென்னை
    044 28416530 



  10. PVRCinemas.com - Happy Movie Days! Watch the best of English ...


    www.pvrcinemas.com/ - 
    Ahmedabad, Allahabad, Aurangabad. Bengalooru, Chandigarh, Chennai. Delhi, Faridabad, Ghaziabad. Gurgaon, Hyderabad, Indore. Latur, Lucknow, Ludhiana ...
    Poonamalle High Road, Aminjikarai, Chennai, Tamil Nadu